இரண்டு நாட்களில் அதிவேக வீதிகளில் ரூ.12.45 கோடி வருமானம் – 3.25 இலட்சம் வாகனங்கள் பயணம்
ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய 325,316 வாகனங்களிடமிருந்து ரூ.124.57 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் இலங்கையின் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் மொத்தமாக ரூ.124,574,925 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் அதிவேக வீதி வலையமைப்பில் மொத்தம் 325,316 வாகனங்கள் பயணித்துள்ளன. ஓகஸ்ட் 26ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்ததுடன், அன்றைய தினம் ரூ.60,409,995 வருமானம் கிடைத்துள்ளது.
அதேவேளை, ஓகஸ்ட் 27ஆம் திகதி 161,553 வாகனங்கள் அதிவேக வீதிகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், அன்றைய தினம் ரூ.64,164,930 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றில் அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.