முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு 40 வயது வரம்பா? – அரசு விளக்கம்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த முன்மொழிவும் அல்லது முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு 40 வயது வரம்பா? – அரசு விளக்கம்

முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முன்மொழிவையும் பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் அல்லது உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் மேலதிக கல்வியைத் தொடராதவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவற்றில் சில முன்மொழிவுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் உரிய பரிசீலனைகளை மேற்கொண்ட பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு 40 வயது வரம்பா? – அரசு விளக்கம்