கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம்புரண்டது – இரண்டு மேடைகளின் சேவை பாதிப்பு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரம்புக்கனை நோக்கிச் செல்லவிருந்த ரயில் தடம்புரண்டதால், இரண்டு மேடைகளின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இன்று மாலை ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் காரணமாக, நிலையத்தின் இரண்டு மேடைகளில் ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாலை 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கிப் புறப்படவிருந்த 1164 இலக்க ரயில், தாமதமாக மேடையை வந்தடைய முயன்றபோது மாலை 4.35 மணியளவில் தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளன. இதனால் குறித்த மேடைகளில் ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் குறித்து புகையிரத திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.