மோகினி நீர்வீழ்ச்சிக்குள் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு
நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மோகினி நீர்வீழ்ச்சிக்குள் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்குள் கவிழ்ந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் முச்சக்கரவண்டியில் இரு பெரியவர்களும் இரு குழந்தைகளும் பயணம் செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த இரு பெரியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த இரு குழந்தைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முச்சக்கரவண்டி எவ்வாறு வீதியை விட்டு விலகி நீர்வீழ்ச்சிக்குள் கவிழ்ந்தது என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.